உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்ட சாலை திறப்பு
- எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்ட சாலை திறப்புவிழா நடந்தது.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சீகூரணி கிராமத்தில் சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தப் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனை செந்தில் நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி, காளையார்கோவில் ஒன்றிய தலைவர் கோவிந்தன், மறவமங்கலம் ஊராட்சி தலைவர் அன்பழகன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் சதிஷ், வழக்கறிஞர்கள் நக்கீரன், நவநீதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.