உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

Published On 2023-08-09 08:12 GMT   |   Update On 2023-08-09 08:12 GMT
  • பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
  • டாக்டர் நபீஷாபானு முன்னிலையில் நடைபெற்றது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் தேசி யதர சான்றிதழ் வழங்குவதற் கான ஆய்வு நடைபெற்றது.

பிரான்மலையில் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கர்ப் பிணி பெண்கள் உள்பட 250-க்கு மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

இந்த பகுதி கிராம மக்களின் நம்பிக்கை யை பெற்ற பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தில் வாரத் தில் 2 நாட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தர மான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் மேலும் பல்வேறு சிகிச் சைகள் அளித்திட மேலும் வசதிகள் கிடைப்பதற்காக தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வினை தேசிய தரச் சான்று ஆய்வு குழு நிபுணர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்ட னர்.

தேசிய தரச்சான்று ஆய்வுக்குழு நிபுணர்கள் டாக்டர் மணிஸ் மதன்லால் சர்மா, டாக்டர் பிரசாந்த், சூரிய வள்ளி ஆகியோர் ஆய்வினை மேற்கொண்ட னர். துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் விஜய் சந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபீஷாபானு முன் னிலையில் நடைபெற்றது.

Tags:    

Similar News