உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா

Published On 2023-05-16 08:32 GMT   |   Update On 2023-05-16 08:32 GMT
  • மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா நடந்தது.
  • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா நடந்தது. மூங்கில் ஊரணியில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடங்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

உற்சவ விழா, அம்மன், Festival, Amman

இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News