உள்ளூர் செய்திகள்

இடைக்காட்டூரில் இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனி விழா நடந்தது.

இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா

Published On 2023-07-08 07:44 GMT   |   Update On 2023-07-08 07:44 GMT
  • இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா நடந்தது.
  • இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாம துரை அருகே இடைக்காட்டூரில் பிரபலமான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்

129-வது ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி முஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார மின்விளக்கு தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தது.

முன்னதாக காலை ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந் தோணி, திருவிழா திருப்பலி யையும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியையும் நடத்தினர். இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News