உள்ளூர் செய்திகள்

தனிக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

சட்டப்பணிகள் தனிக்குழு கூட்டம்

Published On 2023-10-28 08:56 GMT   |   Update On 2023-10-28 08:56 GMT
  • சட்டப்பணிகள் தனிக்குழு கூட்டம் நடந்தது.
  • அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தை கள் உள்பட 62 பேர் கண்டறியப்பட்டு, உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் குடும்ப வன்மு றை குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டது.

அதுபோல் மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பி னர்கள் குழந்தை தொழி லாளர்கள் கொத்தடிமை கள் குறித்து தொழிற் சாலைகள், வணிக நிறுவ னங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்ட றியப் பட்டு அவர்களை பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க செய்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.

Tags:    

Similar News