உள்ளூர் செய்திகள்
- கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம் இணைந்து 101 கவிஞர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன், பழனியப்பன், பொற்கை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூல் ஆசிரியர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.