உள்ளூர் செய்திகள்

சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா

Published On 2023-01-25 08:52 GMT   |   Update On 2023-01-25 08:52 GMT
  • காரைக்குடியில் சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நாளை நடக்கிறது
  • முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் நருவிழி அம்பாள் மாடர்ன் ரைஸ்மில் உரிமை யாளரும், வித்யாகிரி கல்வி குழும தலைவருமான தொழில் அதிபர் லயன்கிருஷ்ணன் குடும்பத்தினரின் புதிய நிறுவனமான ''சூரியா ஜூவல்லரி மார்ட்'' காரைக்குடியில்

நாளை (26-ந்தேதி) திறக்கப்படுகிறது.

காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள நருவிழி காம்ப்ளக்சில் நாளை திறப்பு விழா நடக்கிறது. இங்கு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப் படுகிறது.

தங்க நகை பிரிவை தொழில்அதிபர் படிக்காசும், வைரம் மற்றும் வெள்ளி விற்பனை பிரிவை சிங்கப்பூர் தொழில்அதிபர் செல்லப்பனும் திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை லயன்.கிருஷ்ணன் மற்றும் லயன் அருணகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News