உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் தலைவர் சேவியர்தாஸ் பேசினார்.

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்

Published On 2023-11-21 06:27 GMT   |   Update On 2023-11-21 06:27 GMT
  • வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News