உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-01-24 06:50 GMT   |   Update On 2023-01-24 06:50 GMT
  • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News