உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-09-24 08:08 GMT   |   Update On 2022-09-24 08:08 GMT
  • சாகிர் உசேன்கல்லூரி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
  • இந்த முகாமில் 110 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித்திட்ட அலுவலர் விஜயசங்கரி வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். இதில் 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 110 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர், உதவித்திட்ட அலுவலர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணிநியமன ஆணை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்களுடன், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம், உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன் மற்றும் ஆரிப்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். இளையான்குடி, வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News