உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பேசியபோது எடுத்த படம்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

Published On 2023-08-02 07:52 GMT   |   Update On 2023-08-02 07:52 GMT
  • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
  • காரைக்குடியில் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

காரைக்குடி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டி.டி.நகரில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியி னருக்கு சொந்தமாக காசி யில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது.

அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டு களிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்ப தோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற் சாலை களை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பி னர் தேர்ந்தெடு க்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை.

மாவட்ட துணை தலைவர் நாராய ணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பி னர் சிதம்பரம்.

மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News