உள்ளூர் செய்திகள்

சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அகற்றம்

Published On 2022-09-22 07:46 GMT   |   Update On 2022-09-22 07:46 GMT
  • திருப்பத்தூரில் சாலையில் திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு பிடித்து அகற்றினர்.
  • பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை மதுரை சாலை, சிவகங்கை சாலை, 4 ரோடு, பெரிய கடை வீதி, மூலக்கடை வீதி, அச்சு கட்டு, வானியண் கோவில் தெரு, செட்டிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

இந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்கள் வீதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து அகற்றினர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெருக்களில் உரிமையாளர்கள் மாடுகளை தெருவில் விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News