உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் கலக்கும் சாக்கடை நீரில் பொதுமக்கள் நடந்து செல்வதை படத்தில் காணலாம்.

திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கலக்கும் சாக்கடை நீர்: பொதுமக்கள் அவதி

Published On 2023-07-09 07:24 GMT   |   Update On 2023-07-09 07:24 GMT
  • தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
  • இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்லவேண்டியுள்ளது.

மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.

இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து  செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News