உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி.

தொடர் விடுமுறை எதிரொலி; வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-01-18 12:12 IST   |   Update On 2023-01-18 12:12:00 IST
  • தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
  • மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதனால் அந்த பகுதியே குதுகலமானது.

பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News