உள்ளூர் செய்திகள்

திருநெல்வேலிக்கு 1000 டன் நெல் அனுப்பி வைப்பு

Published On 2023-11-23 10:16 GMT   |   Update On 2023-11-23 10:16 GMT
  • நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
  • சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.

இது தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

இங்கு விளைவிக்கப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News