உள்ளூர் செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட இரும்புகளை படத்தில் காணலாம்.

தனியார் கம்பெனியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட இரும்புகள் பறிமுதல்

Published On 2022-09-15 08:35 GMT   |   Update On 2022-09-15 08:35 GMT
  • கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறியது.
  • இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் திருப்பாதி ரிப்பு லியூர் சிக்னல் அருகே டி.எஸ்.பி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரத்தி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறி யது. இதனைப் பார்த்த போலீசார் சந்தேகமடைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த காரில் பின்பக்கம் சீட் பகுதியில் இரும்பு குவிந்து இருந்த தை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் கடலூர் திருப்பாதி ரிப்புலி–யூர் போலீஸ் நிலையத்தில் கார் மற்றும் 2ேபர்களை பிடித்து சென்று ஒப்படை–த்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர்கள் கடலூர் திருச்சோபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 62)நடுவீரப்பட்டை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடலூர் அருகே உள்ள தனியார் கம்பெனி–யில் இருந்து ஒரு டன் இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News