உள்ளூர் செய்திகள்
குன்னூரில் இரண்டாம் கட்ட சீசன் களைகட்டுகிறது
- சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
- 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2-ம்கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு கடந்த ஜூலை மாதமே 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.
அவற்றை தோட்டக்கலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. சிம்ஸ் பூங்காவில் தற்போது அனைத்து மலர் நாற்றுக்களும் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.