உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் வரிபாக்கி செலுத்தாத கடைக்கு சீல்அதிகாரிகளுடன் உரிமையாளர் வாக்குவாதம்

Published On 2023-03-18 09:13 GMT   |   Update On 2023-03-18 09:13 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
  • வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்தும் ஜப்தி செய்தும் வருகின்றனர். மேலும்கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்.நகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர் என்னை கைது செய்தால் மட்டுமே கடைக்கு சீல் வைக்க முடியும் என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News