உள்ளூர் செய்திகள்

கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கொள்ளிடம் கூழையாரில் கடல் ஆமைகள் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-03-16 09:04 GMT   |   Update On 2023-03-16 09:04 GMT
  • வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே, கடலோர கூழையார் கிராமத்தில் சீர்காழி வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் கூழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வன உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகனேசன் கலந்து கொண்டு மடிக்கணினி மூலம் ஆமைகள் முட்டையிடும் காட்சிகள் மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குறிப்பாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை ஆமை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் இக்கடற்கரை பகுதிக்கு முட்டைகள் இடுவதற்காக வரும் காலமாகும்.

இந்நேரத்தில் கடற்கரையோரம் வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் அழிந்து வரும் ஆமையினமான ஆலிவர் ரெட்லியை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து ஆமை பொரிப்பகங்கள் உள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், கடற்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் கடலில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வனத்துறையிடம் கிராம மக்கள் முன் வைத்தனர்.

முகாமில் விஏஓ பவளச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள், கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News