உள்ளூர் செய்திகள்

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீர்த்தவாரி கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ள காட்சி. 

மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம்- மணல் அரிப்பு

Published On 2022-11-18 09:05 GMT   |   Update On 2022-11-18 09:05 GMT
  • விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
  • அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம்: 

மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் திட்டு 5 மீட்டர் கரைந்து சென்றது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் பைபர் படகு போன்றவை கரையில் நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அழகன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், ரங்கநாதபுரம் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது

கடந்த 30 ஆண்டு பிறகு தற்போது கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே துறை சார்ந்த அதிகாரிகள இப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான உதவிகளை செய்ய அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News