உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-09-09 09:51 GMT   |   Update On 2022-09-09 09:51 GMT
  • ஸ்ரீராம் என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோ ட்டை கீழையூர் முக்கரைத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55) எலக்ட்ரீசியன்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து கடைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கட்டுமானம் அருகே சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் ( 22) என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த ரவி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News