உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2023-02-08 15:37 IST   |   Update On 2023-02-08 15:37:00 IST
  • அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புளியூர் ஏரிக்கரை பகுதியில் இன்றுகாலை 6 வயது மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News