உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2023-08-16 09:38 GMT   |   Update On 2023-08-16 09:38 GMT
  • தனது நண்பர்கள் 6 பேருடன் ஆற்றுக்கு குளிக்க சென்றான்.
  • பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அருள் (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், அருள் தனது பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்வதற்கு பள்ளிக்கு சென்றான்.பின், விழா முடிந்தவுடன் அருள் தனது நண்பர்கள் 6 பேருடன் பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆற்றுக்கு குளிக்க சென்றான்.ஆற்றில் அருள் குளித்துக்கொ ண்டிருந்த போது, திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டான்.

அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அருளை காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.ஆனால் கரைக்கு கொண்டு வந்த சில நிமிடங்களில் அருள் பரிதாபமாக உயிரிழந்தான்.இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News