உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்பு: போலீசார் விசாரணை

Published On 2022-10-23 15:42 IST   |   Update On 2022-10-23 15:42:00 IST
  • மாதர்பாக்கம் அருகே உள்ள கொள்ளாளனூரைச் சேர்ந்த உஷா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • அதே பகுதியில் உள்ள ஏரியில் மாணவி உஷா பிணமாக மிதந்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள கொள்ளாளனூரைச் சேர்ந்தவர் உஷா. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மாயமாகி இருந்தார். அவரை பெற்றோர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரியில் மாணவி உஷா பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News