உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணாபுரம் வழியாக கம்பைநல்லூர் செல்லும் சாலையை படத்தில் காணலாம். 

குண்டும் குழியுமான சாலையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Published On 2023-03-10 09:56 GMT   |   Update On 2023-03-10 09:56 GMT
  • இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. சாலையில் இருபுறங்களிலும் மின்விளக்குகள் இல்லை.
  • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடக்கிறது.

கிருஷ்ணாபுரம்,

தருமபுரி மாவட்டம் அருகே கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் வழியாக கம்பை நல்லூருக்கு தினந்தோறும் சுமார் 8 கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த சாலை அப்பகுதி மக்களின் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. கம்பைநல்லூருக்கு செல்ல வேண்டும் என்றால் சீக்கரம் சென்று விடலாம். அதனால் சாலையை மக்கள் அதிகம்பேர் பயணித்து வருகின்றனர்.

இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. அதனால் ஆங்காங்கே சிறிய, முதல் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

குண்டும் குழியுமான சாலையால் அவசர காலங்களில் மருத்துவ மனைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. சாலையில் இருபுறங்களிலும் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடக்கிறது.

இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News