உள்ளூர் செய்திகள்

பஸ்நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்.

நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Published On 2022-12-13 05:20 GMT   |   Update On 2022-12-13 05:20 GMT
  • தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது
  • விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல வாரங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

இங்கு அரசு அலுவலகங்கள், வங்கி, கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து ெசயல்அலுவலர் சுந்தரியிடம் கேட்டபோது பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவகழிவுகள் கொட்டும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News