உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்

செங்கோட்டை கோவில்களில் சங்கடகர சதூர்த்தி

Published On 2022-12-12 09:12 GMT   |   Update On 2022-12-12 09:12 GMT
  • சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.

செங்கோட்டை:

சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.

இதேபோல் வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News