உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் பூச்சி மருந்து குடித்த சலூன் கடைக்காரர் சாவு

Published On 2023-07-06 15:27 IST   |   Update On 2023-07-06 15:27:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மனமுடைந்த சசிகுமார் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அடுத்துள்ள பறையபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரம்யா.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு ரம்யா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News