உள்ளூர் செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவிலில் 25-ந் தேதி பூச்சாட்டுதல் விழா

Published On 2023-07-04 15:05 IST   |   Update On 2023-07-04 15:05:00 IST
  • ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா
  • அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்படுகிறது.

இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிப்படுவார்கள். இதைத்தவிர, கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.

கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தால் கோவிலில் பொங்கல் வைபோகம் நிகழ்ச்சி மட்டுமே நடை பெற்று வருகிறது. தற்ேபாது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறை வடைந்துள்ளது.

இந்த நிலையில் நடப் பாண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந்தேதி இரவு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.

15-ந்தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

இதேபோல் சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திரு விழா முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News