உள்ளூர் செய்திகள்
சேலம் சரகத்தில், இதுவரை 509 சிறுவர்களை சுற்றுலா அழைத்து சென்ற போலீசார்
- 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
- பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி அறிவுரை யின்படி சேலம் சரகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளில் இருந்தும் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் மூலமாக இதுவரை 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை, மேட்டூர் அணை பூங்கா, ஏற்காடு, கொல்லிமலை, கிருஷ்ணகிரி அணை, ஒகேனக்கல் ஆகிய இடங்களுக்கு இன்ப சுற்றுலாவாக அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்குள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று போலீசார் காண்பித்தனர். பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.