மளிகை கடைக்காரரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் கைது
- கடைக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், இவரிடம் கத்தி யைக்காட்டி மிரட்டி இவ ரிடம் இருந்த ரூ.50 ஆயி ரத்தை பறிப்பு
- கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பணம் பறித்த மர்ம நபர்களை அடை யாளம் கண்டனர்.
வாழப்பாடி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளளாகுண்டம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). இவர் இதே கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தி னம் பட்டப்பகலில் இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், இவரிடம் கத்தி யைக்காட்டி மிரட்டி இவ ரிடம் இருந்த ரூ.50 ஆயி ரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பழனிச்சாமி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர விசா ரணை நடத்தினர். கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பணம் பறித்த மர்ம நபர்களை அடை யாளம் கண்டனர்.
பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்கள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் வினோத் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இதனையடுத்து இருவரையும் நேற்று இரவு அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பட்டப்பகலில் கத்திமுனையில் பணம் பறித்த கொள்ளையர்களை ஒரே நாளில் கைது செய்து பணத்தை மீட்ட வாழப்பாடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.