உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்.

கொளத்தூர் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்

Published On 2023-07-07 16:03 IST   |   Update On 2023-07-07 16:03:00 IST
  • போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்
  • தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கண்ணா மூச்சி கிராமம் மூலப் பனங்காடு பகுதியில் தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலி யுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைத்தலை வர் முத்துசாமி தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசா யிகள் கலந்து கொள்கிறார்கள்.

தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மேட்டூர் அணை யின் உபரி நீரை கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகே இருந்து உயர் அழுத்தம் மூலம் எடுத்து பாலமலை அடிவாரத்தை ஒட்டி குழாய்கள் மூலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை எடுத்து சென்று வழியில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி னால் சுமார் 25 ஆயி ரம் விவசா யிகள் பயன் பெறு வார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண் டும் . விவசாயிகளின் அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம், உழவு மானியமாக விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள். இதில் பெண் விவசாயிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News