உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

Published On 2023-05-28 14:12 IST   |   Update On 2023-05-28 14:12:00 IST
  • பஸ் சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது
  • இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சேலம்

சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஓமலூர் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருந்த வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News