உள்ளூர் செய்திகள்

சேலம் மண்டலத்தில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-06-03 07:39 GMT   |   Update On 2023-06-03 07:39 GMT
  • கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது.
  • இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. இதன் காரண மாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சேலம் மண்ட லமான சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திரு வண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்க ளூருக்கும் இன்று (சனிக்கி ழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News