உள்ளூர் செய்திகள்

வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

Published On 2023-06-22 09:49 GMT   |   Update On 2023-06-22 09:49 GMT
  • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா கூட்டம், சேலம் அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வள்ளி தேவி தலைமையில் நடந்தது.
  • கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா கூட்டம், சேலம் அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வள்ளி தேவி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம், சேலம் வட்டாட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறிய அறையில் இயங்கி வருகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சேலம் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு அதனை மாற்ற வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவி யாளர், இரவு காவலர் உட்பட காலி பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் குமரேசன், அர்த்தனாரி உள்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News