உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி

Published On 2023-05-28 14:13 IST   |   Update On 2023-05-28 14:13:00 IST
மது குடிக்கும் பழக்கம்

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம். சி. காலனி பகுதி சேர்ந்தவர் ஹரி (வயது 50). வெள்ளி வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கம் உள்ள ஹரி இன்று காலை சீலநா யக்கன்பட்டி அடுத்த சிவ சக்தி நகர் நேதாஜி தெருவில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரி யின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News