உள்ளூர் செய்திகள்

ரூ.35லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-02-09 10:02 GMT   |   Update On 2023-02-09 10:02 GMT
  • தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்றனர்.
  • நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,700 முதல் ரூ.50,900 வரையும் விற்பனையானது.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய கால்நடை சந்தைகளில் ஆகும். இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது.

இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,700 முதல் ரூ.50,900 வரையும், ஆடுகள் விலை ரூ. 6,400 முதல் ரூ.15,300 வரையும், கோழி சேவல் ஆகியவை ரூ.300 முதல் 1350 வரையும் விற்பனையானது, நேற்றைய சந்தயில் ரூ.35 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News