உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-04-15 09:41 GMT   |   Update On 2023-04-15 10:43 GMT
  • சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமது அளித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது.

சென்னையில் 2 இடங்களில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கொரட்டூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

இதேபோன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் செய்துள்ளனர்.

அனைத்து இடங்களிலும் மாலை 4 மணி அளவில் ஊர்வலத்தை தொடங்க திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 1 மணி நேரத்துக்குள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போட்டியாக யாரும் திடீரென எதிர் ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஊர்வலத்தில் செல்பவர்கள் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News