சங்கரன்கோவில் அரசு பள்ளியில் ரூ. 85.44 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி- ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 85.44 லட்சம் செலவில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் முருகராஜ், நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பள்ளி மேலாண்மை குழு துணைதலைவர் கலைச்செல்வி, காவல்கிளி, தி.மு.க. வார்டு செயலாளர் வீராசாமி, மாணவர் அணி வீரமணி, விக்னேஷ், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜான் ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.