உள்ளூர் செய்திகள்

பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்த காட்சி.

கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ரூ. 80 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

Published On 2023-09-25 08:56 GMT   |   Update On 2023-09-25 08:56 GMT
  • தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

கயத்தாறு:

கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியியல் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமி, தேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர் சேக்முகமது, சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News