உள்ளூர் செய்திகள்

தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

ரூ.4.70. கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி

Published On 2023-04-10 09:57 GMT   |   Update On 2023-04-10 09:57 GMT
  • ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் பணி நடக்கிறது.
  • தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியனுக்கு ட்பட்ட கோவிலூர் முதல் மிட்டாரெட்டிஅள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு கார்த்தி, மனோகரன், ஒப்பந்ததாரர் அண்ணா துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News