உள்ளூர் செய்திகள்

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் பணிகளை தொடங்கி வைத்த காட்சி


சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

Published On 2022-12-03 08:45 GMT   |   Update On 2022-12-03 08:45 GMT
  • அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
  • சிவபத்பநாதன் கலந்து கொண்டு ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

கடையம்:

கடையம் யூனியனுக்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

யூனியன் சேர்மன் செல்லம்மாள், துணைச் சேர்மனும் ஒன்றிய செயலாள ருமான மகேஷ் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டேறிப் பட்டி ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் கிளைச் செயலாளர்கள் சமுத்திரப் பாண்டியன், செல்வராஜ், ராஜேந்திரன், ஆத்தி செல்வன், முருகன், கலைச் செல்வன், ராமசாமி, ஞானகுமார், ஜெயராஜ் ஆறுமுகநயினார், வார்டு உறுப்பினர்கள் புஷ்பம், பரமேஸ்வரி, ஊராட்சி செயலர் கதிரேசன், மற்றும் நடராஜன், தேன்ராஜ், சபரிராம் ராஜ், நவீன் கிருஷ்ணன், தங்கராஜ், ரத்தினம், ரேவதி, முத்து விஜயன், முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News