உள்ளூர் செய்திகள்
ரூ.1.22 கோடியில் திட்டப் பணிகள்-கீழப்பாவூர் யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
- கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது
தென்காசி:
கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் கவுன்சி லர்கள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். முடிவில் ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.