உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

Published On 2022-10-03 09:05 GMT   |   Update On 2022-10-03 09:05 GMT
  • பார்த்தீபன் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
  • டேவிட்டின் குடும்பத்தினர் பார்த்தீபனிடம் செல்போனை திருப்பி கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது21). ஓட்டல் தொழிலாளி.

செல்போன் பறிப்பு

இவர் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதி 4-வது தெருவை சேர்ந்த டேவிட் (22) என்பவர் வழிமறித்து பணம் கேட்டார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பார்த்தீபனிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றார்.

தொடர்ந்து அவரது வீடடிற்கு சென்று இது குறித்து கேட்டபோது டேவிட்டின் குடும்பத்தினர் பார்த்தீபனிடம் செல்போனை திருப்பி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் வேலை முடிந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மீண்டும் வழிமறித்த டேவிட் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

ரவுடி கைது

இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர். டேவிட் மீது முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   

Tags:    

Similar News