கொள்ளை நடந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் கொள்ளையர் கைவரிசை
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
- இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலைய சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்தன. இதனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை என தெரிந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஆடிட்டர் அலுவ லகம்,போட்டோ ஸ்டூடியோ மற்றும் கணினி மையத்தில் பூட்டை உடைத்தனர்.
இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், ஸ்டூடியோவில் இருந்து 2 காமிராக்கள், ஆடிட்டர் அலுவலகத்தில் இருந்து 1 செல்போன், கணினி மையத்திலிருந்து மடிக்கணினி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த காம்ப்ளக்சில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளைக் கொண்டு கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.