பீளமேடு அருகே மளிகை கடையில் கொள்ளை
- மசக்காளி பாளையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
- ரூ.15 ஆயிரம் ரொக்க பணம், ரூ.65 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள பாலன் நகரை சேர்ந்தவர் சிவ சுப்பிரமணியம் (வயது 46). இவர் மசக்காளி பாளையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்க பணம், கடையில் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் கடையை திறந்து உள்ளே சென்ற சிவசுப்பிரமணியம் கல்லாவில் இருந்த பணம் மற்றும் சிகரெட் பாக்கெட் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துபீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்த சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.