உள்ளூர் செய்திகள்

கைதான கொள்ளையன் சிவகுமார்.

திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது

Published On 2022-11-05 07:14 GMT   |   Update On 2022-11-05 07:14 GMT
  • திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லி கொண்டான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றர் இவரது கடையும்,அதன் அருகே பியூட்டி பார்லர் மற்றும்செல்போன் சர்வீஸ் கீழே உள்ள முடி திருத்தகம் ஆகிய கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். இந்த சிசிடிவி காட்சி ஆனது தற்போது வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம்.கீழ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது சந்தேகம் படும்படியான ஒரு நபரை கூப்பிட்டு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் இதை எடுத்துஅவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 23) என்பதும் அவர் செல்போன் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை  ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில்பாரதியார் தெருவில் உள்ள பர்கர் கடையில் பூட்டை உடைத்து அங்குள்ள பர்கர் மற்றும் தின்பண்டங்களை தின்று அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.இது எடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் பர்கர் கடையில் பூட்டை உடைத்து கடையில் தின்பண்ட ங்களை ஆராய்ந்து தின்று சாவகசமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News