உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-01-10 09:43 GMT   |   Update On 2023-01-10 09:43 GMT
  • இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணை செயலாளர் மாதேஸ்வரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார்.
  • மாநிலக்குழு உறுப்பினர்சின்னசாமி மாவட்டக்குழு முடிவுகள் குறித்து பேசினார்.

நல்லம்பள்ளி,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இண்டூர்வட்டாரம்,பி.எஸ்.அக்ராகரம் கிளை கூட்டம் முன்னால் ஒன்றிய கவுன்சிலர்பெரியண்னன் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணை செயலாளர் மாதேஸ்வரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர்சின்னசாமி மாவட்டக்குழு முடிவுகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் பி.எஸ்.அக்ரகாரம் 2-வது வார்டில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும். ரேசன் கடையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணை வழங்க வேண்டும்.

இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News