உள்ளூர் செய்திகள்

மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2022-12-15 09:19 GMT   |   Update On 2022-12-15 09:19 GMT
  • புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார்.
  • இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது 57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலை யில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது அக்கா சரசு மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 12-ந் தேதி மீண்டும் புஷ்பா மது அருந்தி உள்ளார். அவரை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா, பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாண்டமங்கலம், வட்டாரக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாரு க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன பூசாரி பாளையத்தை சேர்ந்த புஷ்பா என்பது தெரிய வந்தது.இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News