உள்ளூர் செய்திகள்

144 தடை உத்தரவு நீக்கம்: கள்ளக்குறிச்சியில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-07-31 07:59 GMT   |   Update On 2022-07-31 07:59 GMT
  • 144 தடை உத்தரவு நீக்கம்: கள்ளக்குறிச்சியில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
  • சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள க்குறிச்சி வட்டம் முழுவதும், சின்னசேலம் வட்டத்தில் சின்னசேலம் மற்றும் நயினார்பாளையம் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ங்களுக்கும் 18.07.2022 அன்று முதல் 31.07.2022 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு தற்போது விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி கள்ள க்குறிச்சிமாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்ப ற்றி பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அனிந்து, சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News